Ad

Photobucket
 
வியாழன், 26 ஜூலை, 2012

பிள்ளைகளின் புள்ளிகளை மாற்ற பாடசாலை கணினியை ஹாக் செய்த தாய்! (படம் இணைப்பு)

பாடசாலையில் தனது மகனும், மகளும் குறைவான புள்ளிகளை பெற்றதால், அதனை மாற்றுவதற்கு தாய் ஒருவர் பாடசாலை கணினிகளை ஹாக் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 45 வயதாகும் Catherine Venusto என்ற பெண்ணே மேற்படி கணினியை ஹாக் செய்தவராவார்.

இவரது மகனும், மகளும் Northwestern Lehigh பாடசாலையில் படித்து வந்துள்ளனர்.

தவணை பரீட்சையில் இவர்கள் பெற்ற புள்ளியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பாடசாலை கணினி தொகுதியை இணையம் மூலம் ஹாக் செய்துள்ளார்.

குறித்த புள்ளிகளில் காணப்பட்ட உயர்வு காரணமாக சந்தேகம் கொண்ட வகுப்பாசிரியை, பாடசாலை தலைமைக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து சைபர் க்றைம் பிரிவின் உதவியுடன் ஹாக் செய்யப்பட்ட IP ஐ கொண்டு குறித்த பெண் கைதுசெய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரனைகளின் பின்னர் $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



 இப்பதிவு பிடித்திருந்தால் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.